அவுஸ்திரேலிய ஓபன்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா 2வது முறையாக பட்டம் வென்றார்!

Date:

மெல்போர்னில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 2வது முறையாகச் சம்பியன் பட்டம் வென்றார்.

இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு அவுஸ்திரேலியன் ஒபனில் சம்பியன் பட்டத்தை ஒசாகா வென்றுள்ளார்.

மெல்போர்னில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர்பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெனிஃபர் பிராடியை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை ஒசாகா கைப்பற்றினார்.

ஒசாகாவுக்கு ஒட்டுமொத்தமாக 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டம், அவுஸ்திரேலிய ஓபனில் பெறும் 2வது பட்டமாகும்.

ஜப்பானில் பிறந்த ஒசாகா, தனது 3வது வயதிலேயே அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்தார்.

23 வயதான ஒசாகா, கடந்த 2020ஆம் ஆண்டில் ஏ.பி. செய்தி நிறுவனத்தின் சிறந்த தடகள வீராங்கனைக்கான விருதை வென்றார். கடந்த சீசனில் தொடர்ந்து 21 போட்டிகளில் ஒசாகா வென்றுள்ளார். அதில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் சம்பியன் பட்டமும் அடங்கும். இதற்கு முன் 2018இல் யுஎஸ் ஓபனையும் ஒசாகா வென்றுள்ளார்.

இந்த ஆண்டில் நடந்த முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஒசாகா சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பங்கேற்கபதற்காக அவுஸ்திரேலியாவுக்கு ஜனவரி மாதமே ஒசாகா வந்துவிட்டார். ஆனால், ஒசாகா பயணித்த விமானத்தில் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், ஒசாகா பயிற்சியில் ஈடுபடமுடியாமல் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த தனிமைப்படுத்துதலுக்குப் பின்புதான் ஒசாகா பயிற்சியில் ஈடுபட்டு தற்போது சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

தொடக்கத்திலிருந்து தனது இயல்பான, வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசாகா முதல் செட்டில் 4 கேம்களை விட்டுக்கொடுத்தார். அடுத்த செட்டிலும் 3 கேம்களை மட்டுமே கொடுத்து செட்டைக் கைப்பற்றினார். இந்த இரு செட்களிலும் 6 வலிமையான ஏஸ்களை வீசி பிராடியை திணறவிட்டார்.

ஆடவருக்கான ஒற்றையர் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டம் நாளை நடக்க உள்ளது. இந்த ஆட்டத்தில் நம்பர் வன் வீரர் நோவக் ஜோக்கோவிச்சை எதிர்த்து டேனில் மெத்வதேவ் மோதுகிறார். ஜோக்கோவிச் இந்த பட்டத்தை வென்றால் அது 18வது கிராண்ட்ஸ்லாமாகவும், 9வதுஅவுஸ்.ஓபன் பட்டமாகவும் அமையும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மணலுடன் சென்ற பூநகரி பிரதேசசபை உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்த பொலிசார்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேடஅதிரடிப்படையினரால்...

அமெரிக்காவுடனான பேச்சுக்கு பல நிபந்தனைகளை கைவிட்டது ஈரான்!

ஈரான் தனது முந்தைய சில நிபந்தனைகளைக் கைவிட்டு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தனது...

யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்