அவுஸ்திரேலிய ஓபன்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா 2வது முறையாக பட்டம் வென்றார்!

Date:

மெல்போர்னில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 2வது முறையாகச் சம்பியன் பட்டம் வென்றார்.

இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு அவுஸ்திரேலியன் ஒபனில் சம்பியன் பட்டத்தை ஒசாகா வென்றுள்ளார்.

மெல்போர்னில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர்பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெனிஃபர் பிராடியை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை ஒசாகா கைப்பற்றினார்.

ஒசாகாவுக்கு ஒட்டுமொத்தமாக 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டம், அவுஸ்திரேலிய ஓபனில் பெறும் 2வது பட்டமாகும்.

ஜப்பானில் பிறந்த ஒசாகா, தனது 3வது வயதிலேயே அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்தார்.

23 வயதான ஒசாகா, கடந்த 2020ஆம் ஆண்டில் ஏ.பி. செய்தி நிறுவனத்தின் சிறந்த தடகள வீராங்கனைக்கான விருதை வென்றார். கடந்த சீசனில் தொடர்ந்து 21 போட்டிகளில் ஒசாகா வென்றுள்ளார். அதில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் சம்பியன் பட்டமும் அடங்கும். இதற்கு முன் 2018இல் யுஎஸ் ஓபனையும் ஒசாகா வென்றுள்ளார்.

இந்த ஆண்டில் நடந்த முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஒசாகா சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பங்கேற்கபதற்காக அவுஸ்திரேலியாவுக்கு ஜனவரி மாதமே ஒசாகா வந்துவிட்டார். ஆனால், ஒசாகா பயணித்த விமானத்தில் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், ஒசாகா பயிற்சியில் ஈடுபடமுடியாமல் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த தனிமைப்படுத்துதலுக்குப் பின்புதான் ஒசாகா பயிற்சியில் ஈடுபட்டு தற்போது சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

தொடக்கத்திலிருந்து தனது இயல்பான, வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசாகா முதல் செட்டில் 4 கேம்களை விட்டுக்கொடுத்தார். அடுத்த செட்டிலும் 3 கேம்களை மட்டுமே கொடுத்து செட்டைக் கைப்பற்றினார். இந்த இரு செட்களிலும் 6 வலிமையான ஏஸ்களை வீசி பிராடியை திணறவிட்டார்.

ஆடவருக்கான ஒற்றையர் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டம் நாளை நடக்க உள்ளது. இந்த ஆட்டத்தில் நம்பர் வன் வீரர் நோவக் ஜோக்கோவிச்சை எதிர்த்து டேனில் மெத்வதேவ் மோதுகிறார். ஜோக்கோவிச் இந்த பட்டத்தை வென்றால் அது 18வது கிராண்ட்ஸ்லாமாகவும், 9வதுஅவுஸ்.ஓபன் பட்டமாகவும் அமையும்.

spot_imgspot_img

More like this
Related

ஐஸ் சர்ச்சை: தெரணியகலவில் நடந்தது என்ன?

அவிசவெல்ல பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட குழு ஒன்று, நேற்று...

அம்பாறை பிசியோதெரப்பிஸ்ட் மரணம் I நான் அவனில்லை பாணியில் பல பெண்களை ஏமாற்றிய பலே கில்லாடி; 3 குழந்தைகள்… வழுக்கைத் தலைக்கு ‘விக்’!

தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகே காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை...

குழந்தையை காருக்குள் விட்டுவிட்டு மறந்துபோய் வேலைக்கு சென்ற தமிழ்ப்பெண்; குழந்தை பலி: ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!

ஜேர்மனியின் ஷோர்ன்டார்ஃபில் (ரெம்ஸ்-மர் மாவட்டம்) புதன்கிழமை அன்று ஒரு காரில் சடலமாகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்