காதலர் தினத்தில் யானை மீது அமர்ந்து திருமணம் செய்த 52 ஜோடிகள்!

Date:

தாய்லாந்தில் காதலர் தினத்தில் யானைகள் மீது அமர்ந்து ஊர்லமாக சென்றபடி, 52 காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

சோன்பூரி மாகாணத்தில் உள்ள நூங் நூச் பூங்காவில் ஆண்டுதோறும் காதலர் தினத்தை முன்னிட்டு, யானைகள் மீது காதலர்கள் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வழக்கமாக 100 ஜோடிகள் ஒவ்வொரு வருடமும் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், இம்முறை கொரோனா கட்டுப்பாடுகளினால் 52 ஜோடிகளே இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

இன்று, நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டிய கலைஞர்கள் நடனம், இசை வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, யானைகளின் மீது பயணித்தபடியே 52 காதல் ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்கள் யானையில் இருந்தபடி திருமண பத்திரத்தில் கையெழுத்திட்டதை, உள்ளூர் நிர்வாக அதிகாரியொருவர் மேற்பார்வை செய்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...

அதிமுகவில் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு

அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை...

முள்ளிவாய்க்கால் அவலம்: 17 வருடங்களின் பின் மே மாதத்தில் மஹிந்த குடும்பம் கண்ணீர் விடுகிறது!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்