எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராக சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் நேற்று விரிவாக கலந்துரையாடியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், ஜேவிபி தவிர்ந்த அனைத்து எதிர்க்கட்சிகளும் நேற்றைய விவாதத்தில் கலந்து கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 10 சுயேச்சைக் கட்சிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பெரமுன சுயேட்சை எம்.பி.க்கள், டலஸ் அழகப்பெருமவின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்குபற்றினர்.




