கிழக்கு

திருகோணமலையில் குடும்ப தகராற்றில் ஒருவர் அடித்துக் கொலை!

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பத் தகராாறு காாரணமாக ஏற்பட்ட கைகலப்பில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புல்மோட்டை- அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஏ.ஜீ.சதாம் (28) என புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (20) குடும்பத்தகராறு காரணமாக உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரர் தாக்கியதிலேயே இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் தெரியவருகின்றது.

இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் படுகாயமடைந்தவர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரவ்பீக் பாயிஸ் –

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை உரிமைக்காக களமிறங்கிய மக்கள்!

Pagetamil

வாகரை காட்டுக்குள் கசிப்பு காய்ச்சியவர்கள் சிக்கினர்

Pagetamil

கல்முனை இளைஞனின் உள்ளாடைக்குள் சிக்கிய ரூ.4 கோடி!

Pagetamil

போதை மாத்திரைகளுடன் கைதான ஊடகவியலாளருக்கு விளக்கமறியல்!

Pagetamil

ஒரே உருட்டில் ரூ.500 மில்லியனுக்கு சொந்தக்காரியாக முயன்ற நடனக்காரி சிக்கினார்!

Pagetamil

Leave a Comment