‘நான் சொன்னது தவறு’: பல்டியடித்தார் மின்சாரசபை தலைவர்!

Date:

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் சம்பந்தப்பட்ட மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி திட்டம் தொடர்பாக வெள்ளிக்கிழமை (10) கோப் குழு விசாரணையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ மன்னிப்பு கோரியுள்ளார்.

கோப் விசாரணையில், இத்திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் தமக்கு அழுத்தம் கொடுப்பதாக ஜனாதிபதி தமக்கு தெரிவித்ததாக மின்சாரசபை தலைவர் தெரிவித்திருந்தார்.

“எனவே எதிர்பாராத அழுத்தம் மற்றும் உணர்ச்சிகளின் காரணமாக, “மாண்புமிகு பாரதப் பிரதமரால் வலியுறுத்தப்பட்டது) என்ற வார்த்தையை வெளிப்படுத்த நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன், இது முற்றிலும் தவறானது” என்று அவர் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கோப் குழுவில் முன்னிலையாகிய மின்சாரசபை தலைவர், இந்திய பிரதமரின் நிர்ப்பந்தத்தால் அதானி குழுமத்திடம் திட்டத்தை ஒப்படைக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

எனினும், நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ருவிற்றர் பக்கத்தில் அதனை மறுத்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்