பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மறைவையடுத்து வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் சமரவிக்ரம பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஜகத் சமரவிக்ரம, பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து மறைந்த அமரகீர்த்தி அத்துகோரளவிற்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துகோரள கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார். அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியும் அந்த இடத்தில் இறந்து கிடந்தார்.




