பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகியதையடுத்து வவுனியா மக்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் நேற்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை தாக்கியிருந்தனர். இதனையடுத்து பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன் கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட களம் உக்கிரமடைந்திருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இது தொடர்பான அறிவிப்பு வெளிவந்த நிலையில் வவுனியா இலுப்பையடி சந்தியில் நேற்று மாலை மக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.




