25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
உலகம்

இடுகாட்டில் நடனமாடிய 3 இளம்பெண்கள் கைது!

ஈரானில் உள்ள இடுகாட்டில் 3 இளம்பெண்கள் நடனமாடிய காணொளி ஒன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை அவர்களைக் கைது செய்துள்ளதாக நெய்ஷாபூர் நகரில் உள்ள அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நெய்ஷாபூரின் தியாகிகள் அடக்கம் செய்யப்பட்ட இடுகாட்டில் ஆடிய மூவரை அடையாளம் செய்து கைதுசெய்யுமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.

தியாகிகளின் குடும்பத்தினரின் உணர்வுகள் புண்பட்டதாக வழக்கறிஞர் முகமது ஹொசைனி கூறினார்.

சமுதாய வழக்கங்களுக்கு எதிரான செயலைச் செய்ததற்காக மூவரும் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்தாகவும் அவர் கூறினார்.

ஈரானில் நடனமாடுவது குற்றமல்ல. ஆனால் பொது இடங்களிலோ இணையத்திலோ பொது நாகரிகத்தை புண்படுத்தும் வகையில் சிலர் நடனமாடினால் அவர்கள் சட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment