இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்தவர்களே. நேற்று, யாழில் 77 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று, நாடு முழுவதும் 271 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,289 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி, நேற்று யாழ் மாவட்டத்திலிருந்து 77 பேரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 64 பேரும் , கம்பஹா மாவட்டத்திலிருந்து 27 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 20 பேர், களுத்துறையிலிருந்து 15 பேர், அம்பாறையிலிருந்து 12 பேர், இரத்தினபுரியிலிருந்து 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து 9 பேர், பதுளை மாவட்டத்திலிருந்து 6 பேர், கண்டி யிமாவட்டத்திலிருந்து 4 பேர், குருநாகல், ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, புத்தளம், மாத்தளை மாவட்டங்களிலிருந்து தலா 3 பேர், காலி மாவட்டத்திலிருந்து ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.




