Pagetamil
உலகம்

தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்த பிரான்ஸ் எம்.பி கொரோனா தொற்றால் மரணம்

பிரான்ஸில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்த நாடாளுமன்ற எம்.பி. ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸில், கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செயல்படுவது சந்தேகத்துக்குரியது என்று தடுப்பூசிக்கு எதிராகத் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஸ் எவ்ரார்ட் (வலசாரி கட்சியைச் சேர்ந்தவர்) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 76.

மறைந்த ஜோஸ் எவ்ரார்ட் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜோஸ் எவ்ரார்ட் மறைவு, தடுப்பூசிக்கு எதிராக பிரான்ஸில் பிரச்சாரம் செய்தவர்களுக்கு பதிலாக அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு 2021 டிசம்பர் 27ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 2ஆம் திகதி வரையிலான உலக அளவிலான கொரோனா தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த வாரத்தில் உலக அளவில் கொரோனா பரவல் திடீரென 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!