வவுனியா நகரசபையில் தீப்பற்றிய குப்பையேற்றும் வாகனம்: பொலிசார் தீவிர விசாரணை!

Date:

வவுனியா நகரசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பையேற்றும் வாகனம் இன்று (24) அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இவ் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரின் கழிவுகளை நேற்று (23) இரவு ஏற்றிய பின்னர் நகரசபை வளாகத்தில் குப்பையேற்றும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை 2.00 மணி வரை ஊழியர்கள் நகரசபை வளாகத்தில் கடமையாற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நகரசபை ஊழியர் ஒருவர் காலை கடமைக்கு திரும்பிய சமயத்தில் குப்பையேற்றும் வாகனம் எரிந்து கொண்டிருந்தது. அதன் பின்னர் நகரசபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  தீ விபத்தில் வாகனம் பகுதியளவில் மாத்திரமே சேதமடைந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சிசீரீவி உதவியுடன் தீ விபத்திற்கான காரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பேரறிவாளன் சட்டப்படி வழக்கறிஞராக பதிவு செய்ததில் என்ன தவறு? – நீதிபதிகள் கேள்வி

‘பேரறிவாளன் சட்​டப்​படி தன்னை வழக்​கறிஞ​ராகப் பதிவு செய்து கொண்​ட​தில் என்ன தவறு...

மாகாணசபை தேர்தலை பிற்போடும் திட்டமில்லை: பிரதமர்

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என...

மந்திரிமனையின் வரலாற்றை பாதுகாக்க அனைவரும் முன்வாருங்கள்: சீ.வீ.கே அழைப்பு

யாழ்ப்பாண இராச்சியத்தினுடைய சங்கிலிய மன்னனின் மந்திரி மனையின் வரலாற்றை பேணி பாதுகாப்பதற்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்