25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
குற்றம்

வீடியோ படம் எடுத்து வைத்து 10 வருடமாக பாலியல் தொல்லை; யுவதி தற்கொலை; 50 வயது தொழிலதிபர் கைது!

நீர்கொழும்பில் தமிழ் யுவதியொருவர் தற்கொலை செய்த விவகாரத்தில் கைதான ஹொட்டல் உரிமையாளர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு, குடாப்பாடு பகுதியிலுள்ள வின்ஸ்டன்ட் சீ புரன்ட் வில்லா என்ற ஹொட்டலின் உரிமையாளரான 50 வயதான சிறிலால் பெர்னாண்டோ என்பவரே கைதாகியுள்ளார்.

24 வயதான யுவதியுடன் உறவு கொள்ளும் அந்தரங்க படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடப் போவதாக அவர் மிரட்டியதால் யுவதி தூக்கிட்டு உயிரை மாய்த்திருந்தார்.

உயிரை மாய்ப்பதற்கு முன் எழுதிய கடிதத்தை தனது உள்ளாடைக்குள் அவர் வைத்திருந்தார். பிரேத பரிசோதனையில் கடிதம் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டது.

14 வயதில் அந்த யுவதியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து, அதை காணொளியாக பதிவு செய்து செய்து வைத்துள்ளார். அதன்பின்னர், அந்த யுவதி வளர்ந்த பின்னரும், தன்னுடன் உறவு வைத்திருக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் காணொளியை இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டி தொடர்ந்து, பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

அத்துடன், யுவதியிடமிருந்து பணமும் பறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொல்லையை தாங்க முடியாமல் யுவதி அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

இதன்படி, விடுதி உரிமையாளர் கடந்த 16ஆம் திகதி கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ராகமவில் கொடூர கொலை

east tamil

குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!

east tamil

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

Leave a Comment