பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு!

Date:

சீரற்ற காலநிலை காரணமாக பிரதான ரயில் சேவைகள் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

விஜயராஜதஹன புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், பல்லேவெல மற்றும் மீரிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதைகள் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளதையடுத்து பிரதான பாதையில் 10 ரயில்கள் மாத்திரம் இன்று கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அதன்படி, ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்த பகுதி வரை மூன்று ரயில்கள் இயக்கப்படும், பின்னர் மூன்று கூடுதல் ரயில்கள் சேதமடைந்த ரயில் பாதைகளைத் தவிர்த்து அந்தப் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் செல்லும்.

வெயங்கொடவில் இருந்து நான்கு புகையிரதங்களும், கம்பஹாவில் இருந்து ஒன்றும், ராகமவில் இருந்து இரண்டு புகையிரதங்களும் கொழும்பு கோட்டை நிலையம் வரை சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ரயில்வேயின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்