ரிஷாத் பதியுதீனின் மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிக்கை நிராகரிப்பு!

Date:

சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மாமனார் கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (27) நிராகரித்தார்.

சந்தேக நபருக்கு கோவிட் தொற்று இருந்தால் அவருக்கு தேவையான சிகிச்சையை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிறை கண்காணிப்பாளருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான அலி இப்ராகிம் சைபு கிதார் முகமது சிஹாப்தீன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன முன்னிலையாக இந்த பிணை கோரிக்கையை சமர்ப்பித்தார்.

தனது வாடிக்கையாளருக்கு கோவிட் நோய்க்கு எதிரான இரண்டாவது தடுப்பூசி கிடைக்கவில்லை என்றும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பதாக கூறி பிணை வழங்க முடியாது என்றும், அவருக்கு சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் நீதிபதி கூறினார்.

பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம், சந்தேக நபருக்கு தேவையான சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.

spot_imgspot_img

More like this
Related

இன்றைய ராசி பலன் | 10.08.2026

♈ மேஷம்: புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ♉...

உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​தவர் பல்​லவி சிங் ராஜ்புத். இவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்