25.1 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

வடக்கில் 8 நாள் குழந்தை உள்ளிட்ட 64 பேருக்கு தொற்று!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 64 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 31 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.

போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 650 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டது.

இதில், யாழ் மாவட்டத்தில், போதனா வைத்தியசாலையில் 8 பேர், அளவெட்டி மாவட்ட வைத்தியசாலையில் 2 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 4 பேர் (இளவாலையை சேர்ந்த 8 நாள் சிசுவுக்கும்தொற்று உறுதியானது). உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் 2 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 14 பேர் என 31 பேருக்கு தொற்று உறுதியானது.

வவுனியா மாவட்டத்தில், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 5 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் ஒருவர், புளியங்குளம் மற்றும் நெடுங்கேணி மாவட்ட வைத்தியசாலைகளில் தலா ஒருவர் என 23 பேருக்கு தொற்று உறுதியானது.

மன்னார் மாவட்டத்தில், பொது வைத்தியசாலையில் 6 பேருக்கு தொற்று உறுதியானது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், பொது வைத்தியசாலையில் 4 பேருக்கு தொற்று உறுதியானது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment