பேயோட்டுவதாக கூறி மாமியையும், மருமகளையும் துஷ்பிரயோகம் செய்த பூசாரி: கருப்பு இளவரசனை விரட்டினாராம்!

Date:

பேயோட்டுவதாக கூறி, இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பூசாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹாலி​எல போகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.

தனது மனைவி, மருமகளை துஷ்பிரயோகம் செய்ததாக கணவன் அளித்த முறைப்பாட்டையடுத்து,  பொலன்னறுவை, மெதிரிகிரியவை சேர்ந்த பூசாரி கைதானார்.

சந்தேக நபர் 40 வயதானவர், அவர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரிகிறார்.

குற்றச்சம்பவம் நடந்த வீட்டிற்கு கடந்த மாதம் சென்ற பூசாரி அங்கு சடங்கொன்றில் ஈடுபட்டுள்ளார்.  கண்ணுக்குத் தெரியாத கொடூர சக்தி வீட்டில் தங்கியிருப்பதாக பூசாரி கூறினார். இதன் காரணமாக வீட்டுக்காரர்கள் பெரும் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் இதனை அகற்றுவதற்கு ஒரு சடங்கு நடத்தப்படுவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, இரவு பூஜை ஆரம்பிக்கப்பட்டது. வீட்டைச் சுற்றி கோஷமிட்டனர். ஆண்கள் வீட்டுக்குள் நுழைய வேண்டாம் என்று சொல்லப்பட்டது. அவர்களைச் சுற்றி தூபம் சுற்றி எரிக்கப்பட்டது.

அவரது அனுமதியின்றி எந்த ஆணும் வீட்டிற்குள் நுழைய முடியாது, பெண்கள் மட்டுமே வீட்டில் தங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களிற்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூசாரியுடன் வந்த சீடர் யாகத்திற்கு உதவி செய்துள்ளார்.

விடிகாலையில், வீட்டிலுள்ள ஆண்கள் அருகிலுள்ள முச்சந்திகளில் நிற்கும்படி பூசாரியால் அனுப்பப்பட்டனர். இதற்காக தயாரிக்கப்பட்ட பரிகார பொருட்களுடன் பூசாரியின் உதவியாளர் அனுப்பப்பட்டார்.

வீட்டிலிருந்த 45 வயது பெண்ணிற்கும், 19 வயதான மருமகளிற்கும் கருப்பு இளவரசனின் பார்வை உள்ளதாக கூறி, அதை அகற்ற இன்னொரு பரிகாரம் செய்ய வேண்டுமென பூசாரி கூறியுள்ளார்.

இதற்கான பிரசாத பொருட்களை தயாரித்து, அவற்றை அறைக்குள் கொண்டு சென்ற பூசாரி, 45 வயதான பெண்ணை உள்ளே அழைத்துள்ளார். அறை பூட்டப்பட்டு, மின்விளக்கு அணைக்கப்பட்டது.

இதன்பின் அந்தப் பெண்ணுடன் பலவந்தமாக உடலுறவு கொண்டார். தான் தயாரித்த பிரசாதத்தை சாப்பிட்டு, மூன்று முறை உடலுறவு கொள்வதன் மூலம் கெட்ட சக்தியான கருப்பு இளவரசனை விரட்டலாம், அதை செய்யாவிட்டால் அவள் கடுமையான பேரிடரை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். இதனால் மிரண்டு போன பெண், பேயோட்ட சம்மதித்துள்ளார்.

ஒருமுறை மட்டுமே பூசாரியை உடலுறவிற்கு அனுமதித்த மாமியார் தனது மருமகளையும் பேயோட்ட அறைக்குள் அழைத்தார்.

பின்னர், 19 வயதான மருமகள் மூலம் பூசாரி பேயோட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து 45 வயதான பெண் தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் பொலிசாரிடம்

அதன்படி, ஹாலீலா போலீசார் சூனிய மருத்துவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (1 ம் தேதி) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்தார்.

பதுளை SSP வசந்த கந்தேவத்த மற்றும் பதுளை ASP

ஹலீலா ஓஐசி ருவன் குணதிலேக மேற்பார்வையில், சிஐடியின் ஓஐசி டபிள்யூஎம் தயானந்தா, பிசி ரத்நாயக்க, பிசி (54168) லால் பிசி (40900) எதிரிசிங்க, பிசி (9974) சாரங்கா, பிசி சிறிமல்வத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேமோதர – கபில சந்தன குருப்புராச்சி மற்றும் பண்டாரவளை – கருணாரத்ன பல்லேகம ஹலியெல போகொட லந்தெவெல

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்