இன்று திருமணக் கலப்பு: தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த முன்னணி உறுப்பினர்!

Date:

சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

கொடிகாமம், இராமாவில் பகுதியை சேர்ந்த சி.கஜேன் (28) என்பவரே இன்று (11) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சாவகச்சேரி பிரதேசசபைக்கு நியமன பட்டியல் உறுப்பினராக தெரிவான இவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் பிளவு ஏற்பட்ட போது, மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்டு வந்தார்.

இன்று அவருக்கு திருமண கலப்பு இடம்பெறவிருந்தது.

நேற்று இரவு தாய், சகோதரனுடன் சிறிய வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வழக்கமாக தர்க்கம் ஏற்பட்டால் வீட்டை விட்டு வெளியேறி, பக்கத்திலுள்ள காணியில் இருந்து விட்டு, சற்று நேரம் கழித்து வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நேற்று அவர் வீட்டை விட்டு வெளியேறிய போதும், அவர் சற்று நேரத்தினால் திரும்பி வருவார் என உறவினர்கள் நினைத்திருந்தனர். எனினும், நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பாததையடுத்து, அவரை தேடியுள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். வீட்டிற்கு அயலிலுள்ள காணியொன்றில், தவறான முடிவெடுத்து, உயிரை உயிரை மாய்த்த நிலையில் காணப்பட்டார்.

தற்கொலை முடிவெடுப்பவர்கள் தமது குடும்பத்தினரை தீராத துயரத்தில் ஆழ்த்தி செல்கிறார்கள். யாருக்கேனும் தனிமை, உதவி தேவையான நிலை காணப்பட்டால் உதவி எண்களை அழையுங்கள்.

Suicides and Prevention Tips in Sri Lanka and Hotline Call Centre
spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்