Pagetamil
இலங்கை

வடக்கில் நேற்று 147 பேருக்கு தொற்று: யாழில் மட்டும் 122 பேர்!

வடமாகாணத்தில் நேற்று 147 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் யாழ்ப்பாணத்தில் மட்டும் 122 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

பிசிஆர் சோதனையில் 96 பேரும், துரித அன்டிஜன் சோதனையில் 51 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 671 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் யாழ் மாவட்டத்தில், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  18 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர்,  யாழ் மாகரசபை  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர்,  உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 பேர், சங்கானை வைத்தியசாலையில் 4 பேர், பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒருவர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர் என 71 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் என 12 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் என, 5 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

மன்னார் மாவட்டத்தில், மாவட்ட வைத்தியசாலையில் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

அத்துடன், பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்
தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

இதுதவிர, யாழ் மாகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் சோதனையில் 51 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி யாழில் கையெழுத்து

Pagetamil

இலங்கை வந்ததும் அர்ச்சுனாவை பற்றி படித்த கீர்த்தி சுரேஷ்

Pagetamil

பணிப்பாளர் அசமந்தமா?: யாழ் போதனாவில் மீண்டும் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

ரெலோவிலிருந்து விலக்கப்பட்ட விந்தன் தமிழரசு கட்சியில் இணைவு!

Pagetamil

யாழில் அதிர்ச்சி சம்பவம்: வைத்தியசாலை மனநோயாளர் விடுதியில் தங்கியிருந்த யுவதி வல்லுறவு குற்றச்சாட்டு; துப்புரவு பணியாளர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!