வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளம் தம்பதியினரின் சடலம் நேற்று (06) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
36 வயதுடைய கணவர் மற்றும் 21 வயதுடைய மனைவியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
வீட்டின் படுக்கை அறையில், படுக்கையில் இரண்டு சடலங்களும் காணப்பட்டன.
உயிரிழந்தவர் சுதேச மருத்துவம் பயின்றவர். அந்த பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்து சுதேச மருத்துவ சிகிச்சை வழங்கி வந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




