29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
உலகம்

12 முதல் 15 வயதுக்குட்பட்டோருக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: இங்கிலாந்து அனுமதி!

இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் வேகமாக நடைபெறுகிறது. ஆனால், பெரும்பாலான நாடுகளில் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை.

அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுடைய சிறுவர், சிறுமியரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஐரோப்பிய ஒன்றியமும் 12 முதல் 15 வயதுடையோர் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதித்துள்ளது.

ஆனால், பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கே தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் 12 வயது முதல் 15 வயது நிரம்பிய சிறுவர், சிறுமியருக்கும் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் இந்த பணிகள் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகவில்லை. 12 வயது முதல் 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment