70 கோடி பரிசு வெல்ல வாய்ப்பு; தடுப்பூசி போட்டா மட்டும் போதும்!

Date:

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வைக்க ஊக்குவிப்பதற்கு சில நாடுகளில் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் மெக்சிகோ நாடு ஒரு அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்காக 10 மில்லியன் டாலர் (73 கோடி ரூபாய்க்கு மேல்) பரிசுகள் அடங்கிய லாட்டரி திட்டத்தை மெக்சிகோ அரசு அறிவித்துள்ளது. இதில் மெகா பரிசு 5 மில்லியன் டாலர் (36.55 கோடி ரூபாய்க்கு மேல்).

Vax to Max என இந்த லாட்டரி திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் 5 மில்லியன் டாலர் பரிசு வெல்லத் தகுதியானவர்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பதிவு செய்துகொண்டு போட்டியிடலாம்.

ஜூன் மாதம் மத்தியில் தொடங்கி 5 வாரங்களுக்கு வெற்றிபெற்ற 4 பேருக்கு 250000 டாலர் பரிசு வழங்கப்படும். பின்னர் ஆகஸ்ட் தொடக்கத்தில் ஒரே நபருக்கு 5 மில்லியன் டாலர் மெகா பரிசு வழங்கப்படும். மெக்சிகோ பெடரல் நிவாரண நிதியில் இருந்து இந்த பணம் வழங்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

டிக்டொக் வீடியோக்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான மோட்டார் சைக்கிள் சாகசக்காரர்கள் நீதிமன்றில் ஆஜர்

சம்மாந்துறை நகரில் போக்குவரத்து விதிகளை மீறி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்...

மருதமுனையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதான வீதியில், பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில்...

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஷம்போ பக்கெட்டுகள்

கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 5,386 ஷாம்போ பக்கெட்டுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்