மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளி தற்கொலை ;கடன் தொல்லை காரணமா?

Date:

35 வயதான கொரோனா நோயாளி ஒருவர் இன்று மகாராஷ்டிராவின் பீட் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை, போதிய படுக்கைகள் இல்லாதது என கடும் அழுத்தத்தை சுகாதாரத்துறை எதிர்கொண்டு வந்த நிலையில், தற்போது நிலைமை சற்று மேம்பட்டுள்ளதுஎனினும், கொரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, பொருளாதார சிக்கல்கள் என மக்கள் தொடர்ந்து கடும் மன அழுத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் பீட் நகரில் ஒரு நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நபர் ஒரு இரும்புக் கம்பியிலிருந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.எனினும் அவர் எதற்காக இந்த நடவடிக்கையை எடுத்தார் என்பதற்கான சரியான காரணம் ஆராயப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவரது மனைவி செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனை அதிகாரிகள் யாரையும் சந்திப்பதைத் தடுத்ததால், அவர் தொடர்ந்து தனது கணவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்ததாகவும், மேலும் கணவர் தனது பேச்சில் அவர் எடுத்த விவசாயக் கடன் குறித்து மனமுடைந்து பேசி வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதனால் கடனை எவ்வாறு அடைப்பது என்ற மன அழுத்தத்தில், அவர் இந்த துயர முடிவை எடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. எனினும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

spot_imgspot_img

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்