காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் காலமானார் : ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Date:

மகாராஷ்ரா மாநிலம் புனேவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சாதவ், மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம் கொரோனா தொற்று இவருக்கு உறுதியானதை தொடர்ந்து, அவர் புனேவில் உள்ள ஜகாங்கீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூவில் வெண்டிலேட்டர் உதவியுடன் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமான நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். விதர்பா மண்டலத்தில் வலுவான தலைவராக காங்கிரஸ் கட்சியினால் பார்க்கப்பட்ட நிலையில், அவரது மறைவு அந்தக் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாதவின் மறைவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், “என் நண்பர் ராஜீவ் சாதவின் இழப்பு வருத்தம் அளிக்கிறது. அதிக ஆற்றல் கொண்ட, காங்கிரஸ் கொள்கைகளுடன் பிணைந்த அரசியல் தலைவர் ராஜீவ் சாதவ். இவரின் மறைவு நமக்கு பெரிய இழப்பு. அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்