இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமில பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய அபிவிருத்தி லொத்தர் சபைக்கு மூன்று உத்தியோகத்தர்களை நியமித்துவிட்டு, அவர்களை அப்போதைய அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணியாளர்களாகப் பணியாற்ற வைத்ததன் மூலம் அவர் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.




