கிளிநொச்சி, உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை போற்றும் பாடல்கள் அடங்கிய காணொளிகளைப் பதிவேற்றியதாகக் கூறப்படும் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் நடத்திய விசாரணையின்படி, மே 31 அன்று சாவக்கச்சேரி, நாவற்குழியில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியின்போது சந்தேக நபர் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
பின்னர், சந்தேக நபர் அந்தப் பாடல்களில் நான்கைத் திருத்தி, விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் அல்லது அதற்கு ஆதரவளிக்கும் வகையில் தனது ரிக்ரொக் கணக்கில் பதிவேற்றியதாகக் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
காணொளிகளைப் பதிவேற்றப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கைப்பேசியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன்படி, சந்தேக நபரை 2026 ஜூன் 17 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அவர் மீது 1978-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) பிரிவு 03(g)-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.




