காயங்களுடன் முதியவரின் சடலம்

Date:

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (25) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உன்னிச்சை நெடியமடுவைச் சேர்ந்த 63 வயதுடைய கணபதிபிள்ளை யோகராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் சம்பவ தினமான இன்று காலை 8.00 மணியளவில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக பொலிசாருக்கு பொது மக்கள் அறியப்படுத்தினர்

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் தடயவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டார்

இதனை தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய...

கிழட்டுச்சிங்கம் வருமாம்: ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் போடும் ‘சீன்’!

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்