செங்கலடி பிரதான வீதியில் உள்ள ஆர்பிக்கோ இன்சுரன்ஸ் நிறுவன கட்டிட தொகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வை சுகாதாரத்துறையினர் சுற்றிவளைத்தனர். நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இன்று காலை செங்கலடி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு என கிடைத்த தகவலையடுத்தே செங்கலடி பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜா தலைமையில் ஏறாவூர் பொலிசாருடன் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நிகழ்வில் கலந்து கொண்ட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆர்பிக்கோ இன்சுரன்ஸ் நிறுவன முகாமையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.





