செம்மணி புதைகுழியிலிருந்து வெள்ளநீர் வெளியேற்றப்படுகிறது!

Date:

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்படவுள்ள மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு இன்று (09) காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்த ஆய்வின் போது, புதைகுழியினுள் மழையால் தேங்கி நின்ற வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

நல்லூர் பிரதேச சபை மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுநீர் அகற்றும் பவுசர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த இடத்தின் தற்போதைய நிலமைகளை நேரில் பார்வையிட்ட நீதவான் எஸ். லெனின்குமார், எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி அடுத்த வழக்கு விசாரணைகாக திகதியிட்டார். அன்றைய தினமே புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

இதனிடையே, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான மதிப்பிடப்பட்ட பாதீட்டையும் இன்று (09) நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் 48 மணித்தியால போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தது ஈரான்!

48 மணி நேர போர்நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துவிட்டதாக, ஈரானின்...

ஈரானால் அடுத்தடுத்து குறிவைக்கப்படும் அமெரிக்க விமானங்கள்!

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜெட் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க...

ஈரான் சுட்டுவிழுத்திய போர் விமானத்திலிருந்த ஒரு விமானியை மீட்ட அமெரிக்கா!

ஈரான் வான்பரப்பில் ஒரு அமெரிக்கப் போர் விமானம் விழுந்ததாகவும், அதில் இருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்