இளம் பெண் சட்டத்தரணி கைது: வடக்கில் சட்டத்தரணிகள் போராட்டத்திற்கு ஏற்பாடு!

Date:

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர், போலியான காணி உறுதி தயாரித்த குற்றச்சாட்டில் கைதானதை தொடர்ந்து, வடக்கு தழுவிய வேலைநிறுத்த பேராட்டத்துக்கு சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

நாளை (7) வடக்கில் நீதிமன்ற செயற்பாடுகளிலிருந்து சட்டத்தரணிகள் விலகியிருப்பர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர் போலியான காணி உறுதி தயாரித்த மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.

போலியான காணி உறுதி தயாரித்த விவகாரத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள சில சட்டத்தரணிகளை பொலிசார் கைது செய்ய முயன்ற நிலையில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த யாழ்ப்பாண சட்டத்தரணிகள், இந்த விசாரணைகளை இடைநிறுத்த கோரியிருந்தனர்.

இதன் பிரகாரம் விசாரணைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மீள விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கைதான இளம்பெண் சட்டத்தரணி, புதியவர். அவர் மூலம் மூத்த சட்டத்தரணிகள் இந்த செயலை செய்திருக்கலாமென சட்டத்தரணிகள் வட்டாரத்தில் பேச்சுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்