இலங்கை பொதுவுடமை இயக்க முன்னோடிகளில் ஒருவரான கே.ஏ.சுப்ரமணியம் அவர்களின் மனைவி வள்ளியம்மை சுப்ரமணியம் இன்று (26) காலமானார்.
யாழ்ப்பாணம், சுழிபுரத்திலுள்ள சத்தியமனை இல்லத்தில் அவர் காலமானார்.
1938 இல் பிறந்த வள்ளியம்மை தனது கணவருடன் பொதுவுடமை சிந்தாந்தத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்ததுடன், எழுத்தாளராகவும் அறியப்பட்டார்.



