30.2 C
Jaffna
April 9, 2025
Pagetamil
இலங்கை

‘அம்மா என்னை மன்னித்து விடுங்கள்’: யூடியூப்பர் எடுத்த விபரீத முடிவு!

கொழும்பு, காலிமுகத்திடலில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் 31வது மாடியில் உள்ள அறையில் இருந்து விழுந்து இறந்த இளைஞன் குறித்து தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மரணம் தற்கொலைதான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கண்டி, குண்டசாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த இளைஞனின் பணப்பையில், “மன்னிக்கவும், அம்மா, நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன், நான் எப்போதும் உங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்று எழுதப்பட்ட ஒரு குறிப்பையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்த இளைஞன் 30ஆம் திகதி இரவு ஹோட்டலுக்கு வந்து 31வது மாடியில் ஒரு அறையை முன்பதிவு செய்தார்.

ஹோட்டல் ஊழியர் ஒருவர், ஹோட்டலின் நான்காவது மாடியில் உள்ள தோட்டப் பகுதிக்கு அருகில் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்த நிலையில் காணப்படுவதாக அளித்த புகாரைத் தொடர்ந்து, சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இறந்த இளைஞனின் யூடியூப் சனலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

மீண்டும் மஹிந்த கால பாணியில் நடக்கும் ஜேவிபி அமைச்சர்கள்!

Pagetamil

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம்: பிள்ளையான் கைதுக்கான காரணம் வெளியானது!

Pagetamil

நல்லூரில் கவிழ்ந்த டிப்பர்

Pagetamil

கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிப்பு!

Pagetamil

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!