இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அழைப்பு

Date:

இஸ்ரேல் – காசா இடையிலான முதல்கட்ட போர் நிறுத்தம் நாளை (1) முடிவுக்கு வர உள்ள நிலையில், அதனை இரண்டாம் கட்டத்துக்கு நீடிக்க பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேல் பணயக் கைதிகளையும் விடுவிக்க தயாராக உள்ளதாகவும், இதற்கான இரண்டாம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கும், காசாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கும் தாங்கள் தயார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இஸ்ரேல் அமைதிக்கான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு, அதனை மீறாமல் செயல்பட வேண்டும். ஏனெனில், போர் நிறுத்தத்தை மீறுவதால், பணயக் கைதிகளும் அவர்களின் குடும்பங்களும் மேலும் இன்னலுக்குள்ளாகும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பாக அடுத்த சில நாட்களில் சர்வதேச மத்தியஸ்தத்தினரின் உடன்பாட்டுடன் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இறப்புக்கு ஆதாரமாக வங்கிக்கு சகோதரியின் எலும்புக் கூட்டுடன் வந்த நபர்

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, வயதான பழங்குடியின நபர் ஒருவர், தனது...

19 பிக்குகள் போதைப்பொருள் பாவித்தது உறுதி

சுமார் 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹாஷ் ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க...

அல்லைப்பிட்டி சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்தது!

அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் "தபோவனம்" சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. விசமிகளால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்