ஆன்லைனில் பணப்பறிமாற்றம் செய்பவர்களுக்கு மத்திய வங்கியால் முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது
இலங்கை மத்திய வங்கி ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நிகழ்நிலையில் (Online) பணப்பரிமாற்றம் செய்யும் போது வசூலிக்கப்படும் கூடுதல் வங்கி கட்டணம் ஐந்து ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்தின்படி, இனி ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யும் போது, பணம் அனுப்பும் கணக்கிலிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் ரூபாய் 25 ஆக இருக்கும். இதற்கு முன்னர், குறித்த கட்டணம் ரூபாய் 30 ஆக இருந்தது.
ஆன்லைன் பரிமாற்ற கட்டண குறைப்பை மேற்கொள்ள மத்திய வங்கி சமீபத்திய நாட்களில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தியது. தற்போது இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு சற்றே நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




