ஹபரணையில் இந்து ஆலயம் உடைப்பு

Date:

ஹபரணையில் இந்து ஆலயத்தின் முன்பகுதி உடைக்கப்பட்டு பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை தமிழ் சமூகத்தவரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹபரணையில் அமைந்துள்ள இந்து ஆலயத்தின் முன்பகுதி இடிக்கப்பட்டு அதற்கிடையில் பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதோடு, பக்தர்கள் ஆலயத்திற்குள் செல்லும் வழியும் மறிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக தடுப்பு சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சமுகத்தினிடையே கடும் எதிர்ப்பையும் தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மையினரின் ஆதிக்க போக்கால் சிறுபான்மையினர் அடக்குமுறைக்குள்ளாகுவதாகவும் சமூக ஆர்வலர்கள் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்குமாறு அரசாங்கத்தையும், உள்ளூராட்சி அதிகாரிகளையும் மக்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

இதே சமயம் யாழில் தையிட்டி விகாரை தொடர்பான முரண்பாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்நிகழ்வு பக்கச்சார்பான ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிக்காரர்கள் கைது!

இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசாங்க ஆதரவுடனான வேலைகள் வழங்கப்படும்...

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்