30.2 C
Jaffna
April 9, 2025
Pagetamil
இலங்கை

மரக்கட்டைகள் விழுந்ததில் ஒருவர் பலி

வஸ்கடுவ – கபுஹேன பகுதியில் மரக்கட்டைகள் வீழ்ந்ததில் ஒருவர் பலியாகிய சம்பவம் பதிவாகியுள்ளது.

லொறியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மரக்கட்டைகள் தவறி விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் அப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, உயிரிழந்தவர் எகொட உயன பகுதியை சேர்ந்த 48 வயதான கிரிஷாந்த குமார என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லொறியில் இருந்து மரக்கட்டைகளை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பலகைகள் அவரது மீது விழுந்ததில் கடுமையாக காயமடைந்ததாகவும் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர். உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாணதுறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

மீண்டும் மஹிந்த கால பாணியில் நடக்கும் ஜேவிபி அமைச்சர்கள்!

Pagetamil

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம்: பிள்ளையான் கைதுக்கான காரணம் வெளியானது!

Pagetamil

நல்லூரில் கவிழ்ந்த டிப்பர்

Pagetamil

கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிப்பு!

Pagetamil

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!