புகையிரதத்தை பற்றி எதுவுமே தெரியாது… தண்டவாளத்தில் புகைப்படம் எடுத்த போது தாயும் மகளும் உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்!

Date:

“நடைபாதைக்கும் தண்டவாளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நாங்கள் பயணித்துக்கொண்டிருந்தோம். நடைபாதையில் நடந்து செல்லும் போது, ​​நாங்கள் இருந்த இடத்திற்கும் ரயில் தண்டவாளத்துக்கும் இடையே கணிசமான தூரமிருந்தது. ஒரு இடத்தில்
நடைபாதைக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளி இருந்தது.
நான்தான் முதலில் நடந்தேன். ரயில் வருவதைக் கண்டதும், வேகமாக கையை மேலே தூக்கி, பிளாட்பாரத்தில் ஏறினேன். என் பின்னால் தாரிணியும் விமலா அத்தையும் வந்தனர்.அவர்கள் தண்டவாளத்துக்கும் நடைபாதைக்கும் நடுவில் இருந்தனர். அவர்களால் ஏற முடியவில்லை.

விமலா அத்தை ரயிலில் அடிபட்டு உருண்டதை பார்த்தேன். நான் தாரிணியைப் பார்க்கவில்லை. ஓடிச்சென்று  என் இளைய சகோதரர்களிடம் விடயத்தை சொன்னேன்.
பிறகுதான் தெரிந்தது அவர்கள் இருவரும் இறந்துவிட்டார்கள் என்று. நானும் தாரிணியும் சிறுவயதில் இருந்தே ஒன்றாகப் பள்ளிக்குச் சென்றோம். சிறுவயதில் இருந்தே நாங்கள் நல்ல நண்பர்கள்” என்று அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில்  புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது உயிரிழந்தவர்களை புகைப்படம் எடுத்த இளைஞன் கூறினார்.

இரத்தினபுரியைச் சேர்ந்த 18 வயதான மில்லகஸ்தன்னேக விஹகன ஏகநாயக்க, அனுராதபுரம் புதிய நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத பாதையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது நேற்று முன்தினம் (22) பிற்பகல் புகையிரதத்தில் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சாட்சியமளித்தார்.

மேலும் ஆதாரங்களை அளித்து அவர் மேலும் கூறியதாவது:

“நான் ஸ்ரீ பாத மத்திய மகா வித்தியாலயத்தில் 13ஆம் வகுப்பில் படிக்கிறேன்.
கடந்த 20ஆம் திகதி அநுராதபுரம் சல்காடு மைதானத்தில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் விளையாடுவதற்காக எனது இரண்டு இளைய சகோதரர்களும் வந்திருந்தனர்.
அம்மா, அப்பா, நான் மற்றும் என் சகோதரர்கள் விளையாட்டு நிகழ்வுக்கு வந்தோம்.  உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்றது. இறந்த தாரிணியின் பெரிய தாயார் ஒருவர் அனுராதபுரம், புதிய நகரத்தில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வசிக்கிறார்.

பின்னர் நாங்கள் அவருடைய பெரியம்மா வீட்டிற்குச் சென்றோம். அந்தப் பயணத்தில் தாரிணியின் அம்மா விமலா ரஞ்சனி அத்தையும் எங்களுடன் சேர்ந்தார். ரஞ்சனி அத்தை எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சாலை வசிக்கிறார்.

மைதானத்தில் இருந்து பேருந்தில் வந்து அனுராதபுரம் புதுநகரில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து தாரிணியின் பெரியம்மா வீட்டிற்கு சென்றோம். அவர் எங்களிற்கு பானம் அருந்த தந்தார். அருந்தி விட்டு மீண்டும் ரயில் தண்டவாளம் வழியாக அனுராதபுரம் பிரதான ரயில் நிலையம் நோக்கி நடந்தோம். வழியில் தண்டவாளத்தில் நாங்கள் மூவரும் நின்று கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். விமலா ரஞ்சனி அத்தை தன்னை புகைப்படம் எடுக்கச் சொன்னார். இறந்த தாரிணியும் புகைப்படம் எடுக்கச் சொன்னார்.
பிறகு இருவரையும் போட்டோ எடுத்தேன். சுமார் ஆறு புகைப்படங்கள் எடுத்தார்கள். கடைசி புகைப்படம் பிற்பகல் 4:11 மணியளவில் எடுக்கப்பட்டது. புகைப்படம் எடுத்துக்கொண்டு ரயில் பாதையில் நடந்தோம். நான் ரயில் பாதையில் பயணிக்க விரும்பினேன். ரயில்வே பற்றி எனக்கு எந்த அறிவும் இல்லை. ரயில்வே லைனில் போலீஸ் வந்தால், மைதானத்துக்கு போட்டிக்கு போகிறோம் என சொல்லலாம் என கூறிவிட்டு, நடந்தோம். நான் இதுவரை ரயிலில் சென்றதில்லை. எனக்கு இந்த இரயில் பற்றியோ, ரயிலைப் பற்றியோ தெரியாது“ என்றார்.

டேக்வாண்டோ பயிற்றுவிப்பாளர் வசந்த நயன குமார சாட்சியமளித்த போது-

“அநுராதபுரத்தில் நடைபெற்று வரும் பாடசாலை டேக்வாண்டோ போட்டிக்காக ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த சிறார்கள் கடந்த 20ஆம் திகதி பேருந்தில் அனுராதபுரம் வந்தனர். பாலபத்தல மத்திய மகா வித்தியாலயத்தின் 8 பிள்ளைகள் எனது பராமரிப்பில் இருந்தனர். ஏழு பெற்றோர்கள் வந்தனர். இந்தப் போட்டி 20, 21, 22 மற்றும் 23 ஆகிய நான்கு நாட்களில் சல்காடு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. நாங்கள் பழைய பூஜா நகரத்தின் சங்கமித்த மாவத்தையில் உள்ள மகா போதி வித்தியாலயத்தில் தங்கியிருந்தோம்.

உயிர் இழந்த தாரிணி, கடந்த 21ம் திகதி நடந்த டேக்வாண்டோ வேலடி போட்டியில் 62 முதல் 67 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் அவர் தோற்றார். மீண்டும் சங்கபோதி வித்தியாலயத்திற்குச் சென்று அன்றிரவைக் கழித்துவிட்டு மறுநாள் சல்காடு மைதானத்திற்கு வந்தோம். பொதுவாக தோல்வியடைந்த வீரர்களின் பெற்றோர்கள் ஆடுகளத்தில் இருக்க வேண்டும். ஆனால் தாரிணியும் அம்மா விமலா ரஞ்சனியும், மாணவன் விஹகன ஏகநாயக்கவும் எனக்கு தெரியாமல் அனுராதபுரம் புதிய நகருக்கு சென்றுள்ளனர். நான் போட்டியில் இருந்தபோது விஹகன ஏகநாயக்கவின் தந்தை ருவன் ஏகநாயக்க எனக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். விளையாட்டு போட்டிக்கு வந்த தாரிணியும், தாய் விமலா ரஞ்சனியும் ரயிலில் அடிபட்டதாக கூறி, புகைப்படத்தை அனுப்பினார். உடனே நடக்கவிருந்த போட்டிகளை ரத்து செய்துவிட்டு மீதி மாணவர்களை பேருந்தில் ஏற்றி நாங்கள் தங்கியிருந்த சங்கமித்த வித்தியாலயத்திற்கு அனுப்பி வைத்தேன்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்றேன். சடலம் ஸ்ரவஸ்திபுர ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அனுராதபுரம் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்க வருமாறும் கூறினார்கள். வாக்குமூலம் அளிப்பதற்காக அனுராதபுரம் பொலிஸாரிடம் சென்றேன். இது தொடர்பாக நான் விசாரித்த போது விஹகன ஏகநாயக்க, தாரிணி மற்றும் விமலா ரஞ்சனி ஆகியோர் பாதுகாப்பற்ற பகுதிக்கு சென்றது தெரிய வந்தது. இவர்களின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என நினைக்கிறேன்” என்றார்.

இரத்தினபுரி, மாபாலனை, ஸ்ரீ பலபத்தலையை வசிப்பிடமாகக் கொண்ட தாரிணி  ரணசிங்க என்ற 18 வயதுடைய பாடசாலை மாணவியும், கே.விமலா ரஞ்சனி என்ற 37 வயதுடைய தாயாருமே உயிரிழந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 30 வருட சிறைத்தண்டனை

வட கொரியாவிற்குள் இராணுவ ட்ரோன்களை அனுப்பியதற்காக, தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி...

நீதிபதியை சாட்சியாக பெயரிட்டதை மீளப்பெறும் சட்டமா அதிபர் திணைக்களம்

அவிஸ்ஸாவெல்ல உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், தனது அலுவல் பணிகளின் போது...

FIFA WC 2026 | முதல் போட்டியில் 3 ரெட் கார்ட்கள்: தென்னாபிரிக்காவை வீழ்த்தியது மெக்சிகோ

2026 கால்பந்து உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கப் போட்டியில் தொடரை இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்