கொழும்பு- காங்கேசன்துறை புகையிரத சேவை இன்று மீள ஆரம்பம்!

Date:

மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான புகையிரதப் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையான புகையிரத சேவை இன்று (28) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி புகையிரதப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) என்.ஜே. இந்திபொலகே விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் வடக்கு புகையிரதப் பாதையில் புகையிரதம் பயணிக்கும் என்றும், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் புகையிரதத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்தப் புகையிரத நேர அட்டவணைக்கு அமைய,

* கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் புகையிரதம் பிற்பகல் 12.38 க்கு திருகோணமலையை சென்றடையும்.

* பிற்பகல் 1.30 க்கு திருகோணமலையில் இருந்து புறப்படும் புகையிரதம் இரவு 7.59 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.

* கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் புகையிரதம் பிற்பகல் 3.15 க்கு மட்டக்களப்பை சென்றடையும்.

* கொழும்பு கோட்டையில் இருந்து பிற்பகல் 3.15 க்கு புறப்படும் புகையிரதம் இரவு 10.22 க்கு மட்டக்களப்பை சென்றடையும்.

* மட்டக்களப்பில் இருந்து பிற்பகல் 1.40 புறப்படும் புகையிரதம் இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.

* மட்டக்களப்பில் இருந்து இரவு 6.10 க்கு புறப்படும் புகையிரதம் இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் உருவாகியுள்ள நிர்வாக மற்றும் பணியாளர்...

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள்

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன்...

அமைச்சரின் மைத்துனர் மோசடி விவகாரத்தில் கைது!

வாகன ஏலம் தொடர்பான நிதி மோசடி வழக்கில், அமைச்சர் கே.டி. லால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்