திருப்பதியை திணறவைக்கும் கொரோனா: இதுவரை ஏழுமலையான் கோவில் ஊழியர்கள் 15 பேர் உயிரிழப்பு

Date:

கொரோனா தொற்று பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் ஊழியர்களில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், சளி உள்ள பக்தர்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 3 ஆயிரம் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில்தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. அதன் முடிவில், திருப்பதியில் ஒவ்வொரு பகுதியிலும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், மத்திய அரசின் உத்தரவின்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக திருப்பதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகள், வியாபாரம் சார்ந்த நிறுவனங்கள் திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் திருப்பதியில் எங்கும் வெளியில் சுற்றாமல் பேருந்து, ரயில் நிலையங்களுக்குச் சென்று அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்