30.2 C
Jaffna
April 9, 2025
Pagetamil
இலங்கை

O/L வினாத்தாள் கசிவு: தனியார் வகுப்பு ஆசிரியரும், பாடசாலை ஆசிரியையும் கைது!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாளின் சில பகுதிகளை மாணவர்கள் குழுவொன்றுக்கு WhatsApp இல் பகிர்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தனியார் வகுப்பு ஆண் ஆசிரியர் மற்றும் பெண் பாடசாலை ஆசிரியை ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹசலக்க பிரதேசத்தில் தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்தும் பயிற்சி ஆசிரியர் கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெண் ஆசிரியை கம்பஹா பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஆசிரியை தற்போது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றில் பயிற்சி பெற்று வருவதாகவும், கம்பஹாவில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் பரீட்சை நிலையத்தில் பரீட்சைகளுக்கு பொறுப்பாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆங்கில வினாத்தாளை செல்போனில் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் குரூப் மூலம் ஷேர் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கம்பஹாவில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மாணவர்களுக்கு உரிய வினாத்தாளை விநியோகிப்பதற்கு முன்னர் வினாத்தாளை புகைப்படம் எடுத்து தனது கைத்தொலைபேசியில் வட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய ஆண் டியூஷன் ஆசிரியர் மஹியங்கனை புஹுலயாய பிரதேசத்தை சேர்ந்தவர். கைது செய்யப்பட்ட ஆசிரியையின் தாயார் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் முன்னாள் அதிபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். டியூஷன் ஆசிரியர் மற்றும் அவரது தாயாரிடம் இருந்த இரண்டு ஸ்மார்ட் போன்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

ஆசிரியரின் தொடர்புடைய வாட்ஸ்அப் குழுவில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை இடம்பெற்று வருகின்றது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், பரீட்சைக்கு முன்னர் பரீட்சை திணைக்களத்தில் இருந்து வினாத்தாள் கசிவு செய்யப்படவில்லை எனத் தோன்றுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

மீண்டும் மஹிந்த கால பாணியில் நடக்கும் ஜேவிபி அமைச்சர்கள்!

Pagetamil

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம்: பிள்ளையான் கைதுக்கான காரணம் வெளியானது!

Pagetamil

நல்லூரில் கவிழ்ந்த டிப்பர்

Pagetamil

கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிப்பு!

Pagetamil

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!