உலகின் மிகப்பெரிய பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது!

Date:

அமேசான் காடுகளின் மையப்பகுதியில் உலகின் மிகப்பெரிய பாம்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை கண்டறியப்படாத பிரமாண்ட அனகொண்டாவை, தொலைக்காட்சி வனவிலங்கு தொகுப்பாளரான பேராசிரியர் ஃப்ரீக் வோங்கால் தேசிய புவியியல் பயணத்தின் போது கண்டுபிடித்தார்.

இந்த அனகொண்டாவானது 26 அடி நீளமும், 200 கிலோகிராமுக்கு அதிக எடையுடையது. அதன் தலை மனித தலையின் அளவுள்ளது. இந்த பாம்பு இனம் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்ட பாம்பு என்று கூறப்படுகிறது.

வில் ஸ்மித்துடன் நேஷனல் ஜியோகிராபிக்ஸ் டிஸ்னி+ தொடரான ‘போல் டு போல்’ படப்பிடிப்பின் போது இந்த இனம் கண்டறியப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் புதிய இனத்திற்கு லத்தீன் பெயர் ‘யூனெக்டெஸ் அகாயிமா’ என்று வழங்கியுள்ளனர், அதாவது வடக்கு பச்சை அனகோண்டா.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், பேராசிரியர் வோங்க் தனது கண்டுபிடிப்பைக் காட்ட, மிகப்பெரிய அனகோண்டாவுடன் பயமின்றி நீந்துவதைக் காணலாம். கார் டயரைப் போல் தடிமனான அளவுடையது என குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்தியப் படகுப் பொருட்கள் யாழில் இன்று பகிரங்க ஏலம்

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச...

ஈரானின் புதிய உச்ச தலைவர் சுயநினைவின்றி மருத்துவமனையில்?

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி சுயநினைவின்றி இருப்பதாகவும், ஈரானிய...

நுவரெலியா பிரதேசசபை தவிசாளர் கைது!

ஒரு கட்டிடத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்