திருகோணமலை: மனைவியின் கள்ளக்காதலால் விரக்தி; 6 வயது மகளுடன் புகையிரதத்தின் முன் பாய்ந்த கணவன்!

Date:

திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்று (06) பயணித்த இரவு அஞ்சல் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்த தந்தையும், மகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரவு 8.30 மணியளவில் கந்தளாய் பராக்கிரம மாவத்தை துமிரிய கடவைக்கு அருகில் புகையிரதத்தின் முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்ததாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, உயிரிழந்தவர்களின் சடலங்கள் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

கந்தளாய், பேராறு 02 பகுதியைச் சேர்ந்த 38 வயதான கணேசலிங்கம் திருவேந்திரன் மற்றும் அவரது 6 வயது மகள் திருவேந்திரன் கானா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கந்தளாய் ஆரம்ப வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு அவர் வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை அறிந்து மனவேதனை அடைந்து தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்