வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட இருவர் உட்பட மூவருக்கு தொற்று

Date:

நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவை பெற்றோசோ வரை வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டு வந்த இருவர், கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் தாதி ஒருவரின் கணவர் உட்பட மூவருக்கு நேற்று (14) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட, குறித்த இரண்டு பேரும் சுகயீனம் காரணமாக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு மருந்து எடுக்க சென்றனர். அவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டதாக பொது சுகதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இதேவேளை குறித்த வைத்தியசாலையில் தாதியாக கடமைபுரிந்து வருபவரின் கணவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரில் ஒருவர் வலப்பனையையும் மற்றையவர் பேராதனையைச் சேர்ந்தவர் எனவும் மூன்றாமவர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.

தொற்றுக்குள்ளான மூவரையும் கொரோனா சிக்சை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்