சூடானிலிருந்து வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டம்

Date:

சூடானில் வசிக்கும் அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு, சீனக் குடிமக்களும் இராஜதந்திரிகளும் அங்கிருந்து விமானத்தின் மூலம் வெளியேற்றப்படவுள்ளனர்.

சூடானிய இராணுவம் வெளியிட்ட அறிக்கை அதனைத் தெரிவித்தது.

இன்னும் சில மணிநேரத்தில் அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைக்கு இராணுவத் தலைவர் பத்தா அல்-புர்ஹான் இணங்கியுள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.

சூடானில் இராணுவமும், துணை இராணுவப்படையும் அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளன.

ஒரு வாரத்துக்குமேல் நாடெங்கும் நடைபெறும் சண்டையில் இதுவரை 400 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்புக் குறித்த அச்சம் காரணமாக, வெளிநாட்டவரை வெளியேற்றும் திட்டம் இதற்குமுன் செயல்படுத்தப்படவில்லை.

தலைநகர் கார்தூமிலிருந்து இராணுவப் போக்குவரத்து விமானங்களில் வெளிநாட்டவர் ஏற்றிச் செல்லப்படுவர் என இராணுவ அறிக்கை தெரிவித்தது.

சவூதி அரேபியா, தனது குடிமக்களையும் சகோதர நாட்டுக் குடிமக்களையும் சூடானிலிருந்து வெளியேற்ற ஏற்பாடு செய்வதாகக் கூறியிருந்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்