26.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

வவுனியாவில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஆவணப்படுத்த குழு!

வவுனியா மாவட்டத்தில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஆவணப்படுத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களிற்கிடையில் நேற்று வவுனியாவில் நடந்த கலந்துரையாடலில் இந்த தீரமானம் எடுக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 பங்காளிக்கட்சிகள், தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய 10 கட்சிகளும், பல பொதுஅமைப்புக்களும் கலந்து கொண்டன.

இதன்போது, வவுனியா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்த சுட்டிக்காட்டப்பட்டது. தொல்பொருள் திணைக்களம், வனவளதிணைக்களம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்கள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு, பண்பாட்டு அழிப்பு விவகாரங்களை ஆவணப்படுத்தி சர்வதேச சமூகத்திடம் ஒப்படைக்கும் செயற்பாட்டிற்கு 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!