ஜனநாயகத்திற்கு எதிரான ரணிலின் நடவடிக்கைகளை முறியடிக்க ஒன்றிணையுங்கள்: பொதுமக்களிற்கு அழைப்பு!

Date:

உள்ளுராட்சி தேர்தலை பிரகடனப்படுத்துவது தொடர்பில் கருத்து தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேர்தல் பிரகடனம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அதனை நீதிமன்றில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு சட்டரீதியாக செயற்படாவிட்டால் ஜனாதிபதி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் ஜனாதிபதியின் கருத்து நாட்டின் சட்டம் அல்ல எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழு ஜனவரி 5 ஆம் திகதி தேர்தலை அறிவித்தது. தேர்தல் ஆணைக்குழுவினால் கட்டுப்பணம், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொண்டன. தேர்தல் திகதி ஜனவரி 21 அன்று அறிவிக்கப்பட்டது. தபால்மூல வாக்களிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அரசியலமைப்பு மற்றும் சட்டபூர்வமானவை என்று தேர்தல் ஆணைக்குழு கூறுகிறது. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலம் தேர்தல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது உள்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பாராளுமன்றத்தில் பொய் கூறினார்.

சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலை ஒத்திவைக்குமாறு தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி கூறினார். அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டாலும் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“225 எம்.பி.க்களும் தேர்தலை ஒத்திவைக்குமாறு கடிதம் கொடுத்தாலும் தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுதான் முடிவு செய்ய முடியும்” என்றும் அவர் கூறினார்.

தேர்தல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு, உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு அளித்த உறுதிமொழியின்படி தேர்தலை நடத்தலாம் என்றும் அவர் கூறினார்.

ஜனநாயகம் மற்றும் மக்களின் வாக்குரிமைக்கு எதிரான ஜனாதிபதியின் நகர்வுகளை தோற்கடிக்க அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் மக்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என திஸாநாயக்க கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்