கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணி நேற்று இந்தியாவை சென்றடைந்தது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ரி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இரு அணிகளிற்குமிடையிலான முதலாவது ரி 20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (செவ்வாய்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணி வீரர்கள் கொழும்பில் இருந்து விமானம் மூலம் நேற்று மும்பை வந்து சேர்ந்தனர். இன்று அவர்கள் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
ரி20 தொடரில் இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களம் இறங்குகிறது.




