வடமாகாணத்தின் புதிய கல்விப் பணிப்பாளராக யோன் குயின்ரஸ்!

Date:

வட மாகாணத்தின் ஐந்தாவது மாகாண கல்வி பணிப்பாளராக ரி.யோன் குயின்ரஸ் வடமாகாண பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

1986 ஆம் ஆண்டு ஆசிரியராக இணைந்து கொண்ட குயின்ரஸ், பாடசாலை அதிபராக அதன் பின் பலாலி ஆசிரிய கலாசாலையின் அதிபராக செயற்பட்டார்.

பின்னர் உதவிக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், தீவகம், மடு துணுக்காய், கிளிநெச்சி ஆகிய பகுதிகளில் வலயக் கல்விப் பணிப்பாளராகச் செயற்பட்டார்.

பின்னர் 2013 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் ஒன்று அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி, திட்டமிடல், நிர்வாகம் ஆகிய வற்றின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக பதவி வகித்த நிலையில் தற்போது வட மாகாண கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...

மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்