சஜித்தின் சகோதரி நாட்டை விட்டு வெளியேறினார்!

Date:

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டை எரித்து நாசம் செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி ஜயக்கொடி நேற்று காலை (26) நாட்டைவிட்டு  வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது இரண்டு குழந்தைகளான சஞ்சய் ஜெயக்கொடி மற்றும் அமயா ஜெயக்கொடி ஆகியோருடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 505 இல் நாட்டை விட்டு வெளியேறினார்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு தீயில் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி சனிக்கிழமை துலாஞ்சலி ஜெயக்கொடி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள  வீடு ஜூலை 9ஆம் திகதி வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டதுடன், பல பெறுமதியான புத்தகங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

சம்பவத்தின் போது துலாஞ்சலி ஜயகொட இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்