சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தை நோக்கி பயணிக்கும் லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலய மாணவி இமானிக்கு கௌரவம்

Date:

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலயத்திலிருந்து சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்திற்கு முதன்முறையாகத் தெரிவாகி, மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவான மாணவி எஸ்.எப்.எஸ். இமானி கௌரவிக்கப்பட்டார்.

இம்மாணவியைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுடீன் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது. சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் கல்முனை கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்தமைக்காக மாணவி இமானிக்கு இதன்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், அவரது கல்விச் சாதனை கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுரேஸ், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா ஏ. மலிக், ஆசிரிய ஆலோசகர்களான எம்.ஐ. மௌஸுர், திருமதி டேவிட், வீ. தையூப் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்து கொண்டனர்.

சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவி இமானியின் சாதனை, எதிர்காலத்தில் பாடசாலையின் மாணவர்களுக்கு கல்வி மற்றும் அறிவுசார் போட்டிகளில் சிறந்து விளங்குவதற்கான ஊக்கமாக அமையும் என நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்